நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 பேருடன் விமானமொன்று ஓடுபாதையில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
பழைய விமான நிலையத்திற்கும் பொக்காரா சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் மொத்தம் 68 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணி
எவ்வாறாயினும், மீட்புப் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் சில உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளத்தில் உள்நாட்டு விமான சேவையை முன்னெடுக்கும் யெடி எயார்லைன்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.