தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா, போப் பிரான்சிஸை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

நாளை (புதன்கிழமை) வத்திக்கானில் இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக, ஜப்பானில் இருந்து வெளியாகும் கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2014ஆம் ஆண்டு வத்திகானுக்கு பயணம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து தற்போது, 8 ஆண்டுகளுக்கு பின்பு முதன்முறையாக வத்திகானுக்கு ஜப்பான் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது.

இந்த சந்திப்பில், அணு ஆயுதங்களற்ற உலகிற்கான ஆதரவை போப் பிரான்சிஸிடம் ஜப்பானிய பிரதமர் கிஷிடா கோருவார் என கூறப்படுகிறது.

ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 5 நாட்ள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த பயணத்தில் இந்தோனேசியா, வியட்னாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) இத்தாலி செல்லும் அவர், அதன்பின்பு பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது மற்றும் ஆற்றல் துறையில் வளர்ந்து வரும் சீனா ஆகியவற்றை முன்னிட்டு நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதற்காக கிஷிடாவின் இந்த பயணம் அமைந்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here