அமெரிக்காவில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் மாயமான கடற்படையைச் சேர்ந்த 5 மாலுமிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் கப்பலுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் கடந்த செவ்வாய்கிழமை கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் பசுபிக் கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, இயந்திரக் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 5 மாலுமிகள் மாயமாகினர்.

இந்நிலையில் காணாமல் போன 5 மாலுமிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here