மத்திய லண்டனில் தடுப்பூசி எதிர்ப்பு போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது நான்கு அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்கொட்லாந்து யார்ட் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘பல எதிர்ப்பாளர்கள் பொலிஸ்துறையை நோக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய லண்டனில் உள்ள மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை முகமை தலைமையகத்தை முற்றுகையிட ஆர்ப்பாட்டக்காரர்கள் முயன்றபோது பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் பின்னர் தெற்கு கென்சிங்டனுக்கு சென்றனர். போராட்டம் தொடர்பாக இதுவரை 10 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here