பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 70இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் மொத்தமாக 70இலட்சத்து 42ஆயிரத்து 695பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மூன்றாவது நாடாக விளங்கும் பிரேஸிலில், இதுவரை ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 822பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 68ஆயிரத்து 437பேர் பாதிக்கப்பட்டதோடு. 968பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஏழு இலட்சத்து 26ஆயிரத்து 190பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் எட்டாயிரத்து 318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை 61இலட்சத்து 32ஆயிரத்து 683பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்