பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வந்ததாக தகவல் வெளியாகியது. இதற்கிடையே நவாஸ் செரீப் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும், அவருடைய இதய செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சிறைச்சாலை மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிறையில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தார்கள்.
இப்போது அவருடைய உடல் நிலை மேலும் மோசம் அடையவே, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் தன்னுடைய மார்பு மிகவும் வலிக்கிறது என நவாஸ் செரீப் கூறியுள்ளார், இதனையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தார்கள். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து பிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், அங்கு அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.