நிக்கோபார் தீவில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
யூனியன் பிரதேசமான நிக்கோபார் தீவுகளில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நிக்டர் அளவுகோலில் 5ஆக பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் மற்றும் விபத்துகள் குறித்த உடனடி தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 7.4 டிகிரி வடக்கிலும், 94.6 டிகிரி கிழக்கிலும் அமைந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.