கிரீஸ் நாட்டில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.1 ரிக்டர் அளவில் பதிவானதாக தகவல் வெளிவந்துள்ளது. தலைநகர் ஏதென்சில் இருந்து வடகிழக்கில் 29 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 9.4 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும் ஏதென்ஸ் புவியியக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய ஏதென்ஸ் மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் உடனடியாக வெளிவரவில்லை.