தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனைத்து இலங்கையர்களுக்கு சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதுவருடாக அமையட்டும் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ஆதரவை வழங்க தான் ஆயத்தம் என அவர் கூறியுள்ளார்.

நல்லாட்சியை கட்டி எழுப்புவதற்கும் நிரந்தர பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டுக்கும் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு தயார் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுவதற்கு தான் எதிர்பார்ப்புடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சாஸ்திர சம்பிரதாயங்களுக்கு முதல் இடம் வழங்கி இலங்கையர்கள் கொண்டாடும் இந்த புத்தாண்டின் சம்பிரதாயங்களை பாதுகாத்து கொள்வது அவசியம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையர்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here