வவுனியா குடியிருப்பு பகுதியில் குளத்திற்கு அருகாமையில் ஆணின் சடலம் மீட்பு!
வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியை சேர்ந்த 38வயதுடைய 3பிள்ளைகளின் தந்தையாரான மூக்கன் சஜீவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்
கடந்த 25ம் திகதி முதல் இவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு இட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
உடற்கூற்று பரிசோதனையின் பின்பே மரணத்திற்கான காரணம் அறியமுடியும் எனவும் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்…


