செய்தி வாசிப்பாளராக இருந்து பின் தமிழ் தொலைக்காட்சியில் நடந்த பிக்பாஸ் மூலம் இங்குள்ள ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் லாஸ்லியா.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவரை வைத்து ஏகப்பட்ட வீடியோக்கள் உருவாகின. பின் நடுவில் அவர் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சைகள் என சிக்க அவரின் மேல் இருந்த அந்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் குறைந்தது.
ஆனால் லாஸ்லியா இப்போது ரசிகர்களை அதிகம் பேச வைத்து வருகிறார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாவது, போட்டோ ஷுட் நடத்துவது என அதிகம் பேசப்படுகிறார்.
அண்மையில் இவருக்கு கனடாவில் வசிக்கும் நபருடன் திருமணம் என்ற செய்தி வர ரசிகர்கள் ஷாக் ஆகினர். இதுகுறித்து லாஸ்லியா தரப்பில் கேட்டால் இது வதந்தியே என்கின்றனர்
