இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், போராடி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 7-5 என நோவக் ஜோகோவிச், போராடிக் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், ஜோகோவிச்சுக்கு பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் செட் டை பிரேக் வரை நீண்டது.

இதில் தனது அனுபவத்தைக் கொண்டு பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை சிறப்பாக கையாண்ட நோவக் ஜோகோவிச், செட்டை 7(7)-5(1) என கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதிப் போட்டியில், நோவக் ஜோகோவிச், நோர்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொள்ளவுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here