இந்தியன் பிறீமியர் லீக் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி, 8 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 16 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பாக ஷிகர் தவான் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் பானுக ராஜபக்ஷ 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here