தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என அறிய முடிகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை காலை தேர்தல் நாள் குறித்து முடிவு செய்வதற்காக திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்திக்க உள்ளது.

திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் வழங்கப்பட்டால் வர்த்தமானி வெளியிடப்பட்டு பின்னர் தேர்தல் வர்த்தமானி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடைபெறும் என முதலில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும், நிதி உள்ளிட்ட பிரச்சினைகளினால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here