அரச மருத்துவமனைகளில் பற்சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அரச பற்சிகிச்சை நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பல் நிரப்புதல், பல் பாதுகாப்பு உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர்  வைத்திய நிபுணர் மஞ்சுளா ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here