2023ஆம் ஆண்டுக்கான சீருடைகள் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

முதலாவது தொகை சீருடை தொகையை சீன அரசாங்கம் நேற்று (வெள்ளிக்கிழமை) கல்வி அமைச்சிடம் கையளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான வருடாந்த பாடசாலை சீருடைத் தேவையில் 70 வீதத்தை பூர்த்தி செய்ய சீன அரசாங்கம் இணங்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here