அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர், பொறியியலாளர் ரோஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் தொடர்பிலான தரவுகளை ஒரு மாதத்திற்குள் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை வழங்கிய அனுமதிக்கு அமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வீட்டுப் பாவனை மின்சார அலகிற்கான நிலையான கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய  0 -30 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 120  ரூபாவிலிருந்து 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

31-60 அலகுகளுக்கான நிலையான கட்டணம் 240 ரூபாவிலிருந்து 550  ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

60-90 அலகுகளுக்கான நிலையான கட்டணமும் 90-180 அலகுகள் வரையான நிலையான கட்டணமும் முறையே 650 ரூபாயாகவும்  1500 ரூபாயாகவும் அமைந்துள்ளது.

180  அலகுகளுக்கு மேல் 1500 ரூபாயாக இருந்த நிலையான கட்டணம் 2000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here