ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திர குமார மற்றும் மேல் மாகாண குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரோஹான் பிரேமரத்ன ஆகியோருக்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
பெறுமதியான பொருட்கள் கொள்ளை
சூம் தொழிற்நுட்பம் ஊடாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் உத்தரவை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெறுமதியான பொருட்களை திருடிச்சென்றுள்ளதகவும் தேசபந்து தென்னகோன் இந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.
சாட்சியங்கள் அழிக்கப்படும் சேகரிக்குமாறு உத்தரவு
உடனடியாக இது சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சாட்சியங்கள் அழிக்கப்படும் முன்னர் சாட்சியங்களை சேகரிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை உடனடியாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தென்னகோன் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்று ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்றவர்கள், அவற்றுக்குள் எடுத்த காணொளிகள், புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளனர்.