எரிபொருள் கொள்வனவு செய்வோருக்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
எரிபொருள் விநியோகம்
அதன்படி லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்களில் இன்று முதல் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் திருகோணமலையில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் களஞ்சிய முனையம் 24 மணித்தியாலமும் இயங்கும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
8ஆம் திகதி வழங்கப்பட்ட அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும் கடந்த 8 மற்றும் 9ஆம் திகதிகளில் மூடுவதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.