எரிசக்தி அமைச்சரின் கோரிக்கை
எரிபொருள் விலை நிர்ணயம் மற்றும் கொள்வனவு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கோப் குழுவிடம் கோரியுள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலின் விலை
நாட்டில் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 200 ரூபாவுக்கும் குறைவான விலையில் வழங்க முடியுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
I would like to kindly request @charith9 to call CPC & myself to the CPOE to inquire into the allegations made by PUCSL Chairman on FuelPricing & Procurement. Inquiry should be held on if the COPE & the Public was misled by PUCSL Chairman or CPC on fuel pricing & any other matter
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 8, 2022