இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 44.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

யூரோ மற்றும் பவுண்டின் பெறுமதி

அதேவேளை, யூரோ  எதிராக ரூபாவின்  பெறுமதி 40.7 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டுக்கு எதிராக 39.8 சதவீதத்தினால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஜப்பானிய யென்னுக்கு எதிராக 35.1 சதவீதம் மற்றும் அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 43.1 சதவீதம் என்று ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

கடந்த 10ஆம் திகதி இந்திய ரூபாவிற்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 41.7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மே 13 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட அந்நிய செலாவணி ஸ்திரப்படுத்தல் கொள்கைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்து பெற்று வருவதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here