நேற்று (09) இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் ஆலோசனை வழங்கியுள்ளார்.சம்பந்தப்பட்ட விடயங்களின் தீவிர தன்மையைக் கருத்திற் கொண்டு, மக்களின் அரசியலமைப்பு உரிமைகளில் சட்டவிரோதமாக தலையிடும் சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்துதியுள்ளார்.
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் நாட்டின் தண்டனைச் சட்டங்களை மீறும் வகையில் ஒரு சில குழுவினரால் அமைதியான போராட்டங்களில் வன்முறை இடம்பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள், நாடு முழுவதிலும் வன்முறைச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்று இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணி குறித்து விசாரணைகளை நடத்துமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனவே இது தொடர்பான விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கி விரைவாக விசாரணைகளை முடிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.