பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (திங்கட்கிழமை) விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்தோ, மாற்று அரசாங்கமொன்றை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதத்திற்கு உட்பட்டு பதவி விலகுவதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார் என்றும் தகவல் வெளியாகியிருந்தன.

எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லையென பிரதமர் உறுதிப்படுத்துவதாக பிரதமரின் ஊடக செயலாளர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, இது தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற, முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here