நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் அதன் விலையை உயர்த்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் (92) பெட்ரோல் லிட்டர் 338 ரூபாவாகவும், ஒக்டேன் (95) லிட்டருக்கு 373 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லிட்டர் 289 ரூபாவாகவும், சூப்பர் டீசல் லிட்டர் 329 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
லங்கா IOC நிறுவனம் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையை அதிகரித்திருந்த பின்னணியிலேயே, பெற்றோலிய கூட்டுதாபனமும் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது.