எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் தமக்கு தேவையான எரிபொருளைப் பெறக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
அளவுக்கு அதிகமான எரிபொருளை வைத்திருப்பவர்களை பொலிஸார் கைது செய்யப்படும் சம்பவம் இடம்பெற்ற நிலையில், தற்பொழுது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளைப் பெறக்கூடியதான நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் கொள்கலனுக்கு எரிபொருள் வழங்கப்படாமையாலும் மிக இலகுவில் எரிபொருள் பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மற்றும் வாகன சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதகாலமாக ஏற்பட்டு வந்த எரிபொருளுக்கான பற்றாக்குறை குறைவடைந்து மக்களின் நீண்டவரிசை தற்பொழுது குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.