இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மன்னாரிலிருந்து இன்றும் படகுகள் மூலம் 19 பேர் தமிழகம் சென்றடைந்துள்ளனர்.
மன்னாரிலிருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேரே இவ்வாறு தமிழகத்தைச் சென்றடைந்துள்ளனர்.
இலங்கையின் பொருளாதார நிலைமை மோசமடைந்துள்ளதையடுத்து 39 இலங்கையர்கள் அகதிகளாக இந்தியா சென்றுள்ளனர்.
கடும் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கடல் வழியாகத் தனுஷ்கோடிக்குச் சென்று தஞ்சமடைவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.