பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தற்போது நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த சில தினங்களில் எதிர்பாராத விதமாக நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் போராட்டங்களால் நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து, அமைச்சரவை கலைப்பு, உயர்மட்ட பதவி விலகல் என அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.