இலங்கையில் இன்று காலை 10.38 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஹம்பாந்தோட்டை, லுணுகம்வேஹரவில் 2.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தேசிய நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை இலங்கையின் சில பகுதிகளில் அண்மைய காலமாக நிலநடுக்கம் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.