இலங்கையில் மேலும் 573 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் இதுவரை 216,111 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.