சிறையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், பிணையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதிமன்றத்தால் குறித்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவரோடு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐவரும் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.