மன்னாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கிராமசேவகர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில் தற்போது ஒரு கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹம்பலாங்கொடை-கொடஹேன பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை அப்பகுதியை சேர்ந்த மூன்று பேர் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு (6) இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 28 வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.