வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் பயணித்த மூன்று வியாபார நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

வவுனியா – நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்ட வெளி மாவட்டதைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படும் வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள மூன்று வியாபார நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஏனைய ஊழியர்களுக்கு இன்றையதினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர்பான தகவல்களும் சுகாதாரப் பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here