நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்று (வியாழக்கிழமை) காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றது.

காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து மகர வாகனத்தில் அம்மன் எழுந்தருளி உள்வீதி வலம் வந்தார்.

இதேநேரம், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 20ஆம் நாள் திருவிழாவான நேற்று மாலை கைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.

மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து கைலாச வாகனத்தில் வேல் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி உள்வீதி வலம் வந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here