சீன விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்து 96,000 மெட்ரிக் தொன் கரிம உரங்களை சர்ச்சைக்குரிய வகையில் கொள்வனவு செய்தமை காரணமாக தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு 1,382 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கேள்விக்குரிய சீன உரத்தை கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியை விடுவிப்பதன் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய அனைத்து அதிகாரிகளும் சட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது.
அத்துடன், இது தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
கரிம உர இறக்குமதி
2021 ஆம் ஆண்டில், சீனாவில் உள்ள கிங்டாவோ சீவின் பயோடெக் குரூப் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கரிம உரத்தை இறக்குமதி செய்ய அப்போதைய அரசாங்கம் அனுமதி வழங்கியது.
எனினும் இலங்கையின் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் (NPQS), நோய்களை ஏற்படுத்தும் எர்வினியா மற்றும் பேசிலஸ் ஆகிய அழிவுகரமான பக்டீரியாக்களை அவதானித்துள்ளது.
இறக்குமதி செய்வதற்கு வசதியாக கடன்
இதற்கு மத்தியிலும், விவசாய அமைச்சின் அப்போதைய செயலாளரால் நியமிக்கப்பட்ட விசேட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு, உரிய கரிம உர ஏற்றுமதியை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், சிலோன் உரக் கம்பனி மற்றும் கொழும்பு வர்த்தக உரக் கம்பனி லிமிடெட் ஆகியன இந்த உர ஏற்றுமதியை இறக்குமதி செய்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை (LOCs) திறந்துள்ளதாக அந்த கணக்காய்வாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.