மட்டக்களப்பு தலைமையகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொயிட்ஸ் அவனியு வீதியில் (வியாழக்கிழமை ) மாலை அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் சடலத்தினை உறவினர்கள் முன்வந்து அடையாளம் காட்டும் வரை பதின்நான்கு நாட்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சடலம் வர்த்தத நிலையல்களுக்கு அருகில் காணப்பட்டதுடன்,சம்பவ தினம் போயா விடுமுறை என்பதனால் மட்டக்களப்பு நகரத்தில் உள்ள அதிகளவான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பொதுமக்களின் நடமாட்டங்களும் குறைவாக காணப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.