லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சம்பளம் மற்றும் கடனை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை விற்பனை செய்து பெற்றுக் கொள்ளப்படும் பணத்தில் லேக்ஹவுஸ் நிறுவனத்தை கொழும்பில் வேறொரு இடத்தில் ஆரம்பிக்கவும் அல்லது அந்த நிறுவனத்தை கலைக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பழமையான கட்டிடங்கள் சுற்றுலாவை துறையை மேம்படுத்த உதவுவதால், இங்கு ஹோட்டல் வளாகத்தை அமைப்பதே நோக்கம் என ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
லேக் ஹவுஸ் நிறுவனம் அமைந்துள்ள காணி 90 வருட குத்தகையின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், குத்தகைக் காலமும் அடுத்த வருடத்துடன் நிறைவடையவுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தாத்தா டி.ஆர். விஜயவர்தன லேக் ஹவுஸ் நிறுவனத்தின் நிறுவுனர் என்பது குறிப்பிடத்தக்கது.