2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று வவுனியா ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது வவுனியா ஊடகஅமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது அவர் தொடர்பான நினைவுப்பகிர்வுரையினை ஊடகவியலாளர் ந. ஜனகதீபன் நிகழ்த்தியிருந்தார் நிகழ்வில் வவுனியா ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தமது இதயபூர்வமான அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.