நோர்வூட் பகுதியில் சாரதிகள் டீசலுக்காக நான்கு நாட்கள் வரிசையில் காத்திருப்பதாகச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை அடுத்து மலையகப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகின்றது.
இந்நிலையில் டீசலுக்காகவும், பெட்ரோலுக்காகவும் வாகனங்களை வைத்துக்கொண்டு சாரதிகள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை அதிகரித்ததனை தொடர்ந்து பெட்ரோலுக்கான வரிசை ஓரளவு குறைந்துள்ள போதிலும் டீசலுக்கான வரிசைகள் தொடர்ந்து காணப்படுகின்றன.
எரிபொருளை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் மக்கள்
இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நோர்வூட் – பொகவந்தலாவை பகுதிகளைச் சேர்ந்த சாரதிகள் வரிசையில் நிற்பதாகவும் இன்று வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்திருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த நான்கு நாட்களாக நோர்வூட் பகுதியில் பெட்ரோல் தட்டுப்பாடு நிலவியதாகவும் பெட்ரோல் இல்லாததன் காரணமாகவும், விலையேற்றம் காரணமாகவும் பல முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிலைக் கைவிட்டுள்ளதாகவும் ஒரு சில முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்.