வவுனியா – வைரவபுளியங்குளம் குளத்தில் மூழ்கி முதியவர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த முதியவர் இன்று மாலை வைரவபுளியங்குளம் பகுதியில் ஓய்வெடுத்துள்ள போது தவறுதலாக குளத்தினுள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த சிலர் அவரை உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த ஆ.தங்கவேல் என்ற முதியவரே மரணமடைந்துள்ளார்.