காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தப்பட்டு 25 நாட்களாகின்றன.
நேற்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.