கண்டியிலிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட சரக்கு புகையிரதம் வட்டவளை ரொசல்லை பகுதியில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதம் இன்று(18) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இந்த புகையிரதம் கண்டி – பதுளை பிரதான புகையிரத பாதையில் ரொசல்லை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் காலை 7.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது. இதனால் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கிப் பயணித்த பயணிகளும் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர். குறித்த புகையிரதம் தடம்புரண்டதன் காரணமாகப் புகையிரத சமிஞ்ஞை கட்டுப்பாட்டுத் தொகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன.
குறித்த புகையிரதத்தினை தண்டவாளங்களில் அமர்த்துவதற்காக நாவலபிட்டியிலிருந்து குழுவினர் வருகை தரவுள்ளதாகவும், மிக விரைவில் புகையிரதம் பயணங்கள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக நவாலபிட்டி புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.