வவுனியாவில் நேற்றைய தினம் இருவர் கோவிட் தொற்றினால் மரணமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
என்ற போதும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.