சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான தொழில்நுட்ப குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம விலகியுள்ளார்.

அவரது இராஜினாமா பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான நெறிமுறைகளை உருவாக்குவதில் வைத்தியர் ஆனந்த முக்கிய பங்கு வகித்தார் என்றும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொடர்பான தொழில்நுட்ப குழு எடுத்த முடிவுகளுடன் கருத்து வேறுபாடு காரணமாக அக்குழுவில் இருந்து ஆனந்த விஜேவிக்ரம விலகியுள்ளார்.

இருப்பினும் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் எங்களுடன் இணைந்துகொள்ள வேண்டும் என ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here