கொரோனாவுக்கு எதிரான மேலும் ஒரு தொகை சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, இதுவரை 22 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here