யாழ்.கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று அதிகாலை திடீரென கடல் நீர் குடியிருப்புக்குள் நுழைந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் இன்று காலையிலேயே சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.