கல்முனை நகரில் கொரோனா தொற்றாளர் உணவருந்திய ஹோட்டல் ஒன்று மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இங்கு கடமையாற்றிய பணியாளர்களின் சுயதனிமைப்படுத்தல் காலம் பூர்த்தியான பின்பு, கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னரே இந்த ஹோட்டல் மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்படும் என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.றிஸ்னி தெரிவித்தார்.