
சலூன் ஒன்றின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, அந்த சலூனுக்குச் சென்ற 125 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கஹதுட்டுவ பிரதேசத்தில் உள்ள சலூன் ஒன்றின் உரிமையாளரே தொற்றுக்குள்ளாகியுள்ளார். கஹதுட்டுவ பொது சுகாதார பரிசோதகர் ஐ.கே.எம். பிரபாத் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேலியகொட மீன்சந்தைக்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நபர் முடி வெட்டுவதற்காக இந்த சலூக்குச் சென்றுள்ளார்.