வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்தவழக்குகள் அனைத்தும் முதலாம் திகதி இடம்பெறும் என வவுனியா நீதிவான் நீதிமன்றபதிவாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,மே மாதம் முதலாம் திகதி விடுமுறைநாள் இல்லை எனவும் மே 7 ஆம் திகதியே விடுமுறைநாளாக கொள்ளப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் மே மாதம் 7 ஆம் திகதிக்கு இடப்பட்ட வழக்குகள் அனைத்தும் மே முதலாம் திகதி நடத்தப்படும் என வவுனியா நீதிவான் நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.