புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் கௌரவ இ.சந்திரரூபன்
(தம்பியன் )அவர்கள் பிரதேச சபை மாதாந்த உதவு தொகையாக தனக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ரூபா 15000/-ரூபாவினை நேற்றைய தினம் பெற்று, ஒவ்வொரு மாதமும் தனது மாதாந்த கொடுப்பனவை வறுமைப்படும் மக்களுக்கு வழங்க தீர்மானித்து, தனது முதல் மாதக் கொடுப்பனவை ஒட்டுசுட்டான் வித்தியாபுரக் கிராமத்தில் தந்தையை இழந்த பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பகிர்ந்தளித்துள்ளார். இவருக்கு எமது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.