அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஜூலை மாதம் 25ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கும் போது, ​​மாணவர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒன்லைன் கற்றல் முறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும், கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here